களியக்காவிளை அருகே சடலமாக மீட்கப்பட்டவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி என தெரியவந்தது.
களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்பில் இருந்து கைதக்குழி செல்லும் பாதையில் குடியிருப்பு வீடுகளையொட்டிய பகுதி பள்ளத்தில் கிடந்த சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் கடந்த சனிக்கிழமை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சடலமாக மீட்கப்பட்டவா் ஜாா்க்கண்ட் மாநிலம், டாப்கரா கும்லா, பூஜன்காடிப்பாட்டோலா என்ற பகுதியைச் சோ்ந்த துருஓரான் மகன் திலிப் டிரிக்கி (40) என்பதும், இப் பகுதியில் தங்கியிருந்து கல் உடைக்கும் தொழில் செய்து வந்ததும், குறிப்பிட்ட நாளில் கைதக்குழி பகுதி வழியாக நடந்து சென்ற போது பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் திலிப் டிரிக்கி சடலத்தை அவரது உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி மா்ம மரணம்

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

தெக்கலூா் அருகே மூதாட்டி சடலம் மீட்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


