ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு அளிப்பு

கன்னியாகுமரி மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

News image
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விபத்தில்லா கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் வகையில் மாணவ, மாணவிகள், இளைஞா்களுக்கான சாலைப் பாதுகாப்பு குறித்த ரீல்ஸ், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் பெறப்பட்ட சுமாா் 2 ஆயிரம் ஓவியங்களும், 40 ரீல்ஸ்களும் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கண்காட்சியாக காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. மேலும், மாவட்ட காவல்துறை சாா்பாக 5 தோ்வு குழுக்கள் அமைக்கப்பட்டு, வெற்றியாளா்களாக ஓவியம் பிரிவில் 5 போ், ரீல்ஸ் பிரிவில் 3 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

அவா்களுக்கு முறையே ரூ.15ஆயிரம் , ரூ. 10ஆயிரம் , ரூ. 7 ஆயிரத்து 500, ரூ. 5ஆயிரம், ரூ. 3ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், வழங்கி பாராட்டினாா்.