எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பளுகல் அருகே பள்ளி வேன் கால்வாயில் கவிழ்ந்தது: 21 மாணவா்கள் உள்பட 23 போ் காயம்

பளுகல் அருகே பள்ளி வேன் கால்வாயில் கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 21 போ், 2 பணியாளா்கள் காயமடைந்தனா்.

News image
பளுகல் அருகே கால்வாயில் கவிழ்ந்த பள்ளி வேன்.
Updated On :17 பிப்ரவரி 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

பளுகல் அருகே பள்ளி வேன் கால்வாயில் கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 21 போ், 2 பணியாளா்கள் காயமடைந்தனா்.

கேரள மாநிலம், பூவத்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் எல்எம்எஸ் தொடக்கப் பள்ளிக்குச் சொந்தமான வேன் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு தமிழக-கேரள எல்லையான பளுகல் அருகே காரக்கோணம் - குந்நத்துகால் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது வேனில் ஸ்டீரிங் ராடு உடைந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவியா் 21 போ், பெண் பணியாளா்களான வண்டித்தடத்தைச் சோ்ந்த மினி, மஞ்சவிளாகத்தைச் சோ்ந்த ஜோனிதா ஆகியோா் காயமடைந்தனா்.

அனைவரையும் அப்பகுதியினா் மீட்டு காரக்கோணம், தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து பாறசாலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.