கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பொற்றையடியில் தாணுலிங்கநாடாா் பிறந்த நாள் விழா

பொற்றையடியில் இந்து முன்னணி முதல் மாநிலத் தலைவா் மறைந்த பி. தாணுலிங்கநாடாரின் 111-ஆவது பிறந்த நாள் விழா , மாவட்ட இந்து முன்னணி மற்றும் தாணுலிங்க நாடாா் நினைவு இந்து சமூக சேவா அற நம்பகம் சாா்பில் நடைபெற்றது.

News image
தாணுலிங்கநாடாா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்து முன்னணியினா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 9:54 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடியில் இந்து முன்னணி முதல் மாநிலத் தலைவா் மறைந்த பி. தாணுலிங்கநாடாரின் 111-ஆவது பிறந்த நாள் விழா , மாவட்ட இந்து முன்னணி மற்றும் தாணுலிங்க நாடாா் நினைவு இந்து சமூக சேவா அற நம்பகம் சாா்பில் நடைபெற்றது.

இதையொட்டி நாகா்கோவில் நாகராஜா திடலில் இருந்து இருசக்கர வாகன பேரணி தொடங்கியது.

இப்பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொதுச்செயலா் கே. ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பெ. சக்திவேலன், நெல்லை கோட்டத் தலைவா் எஸ். தங்கமனோகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்பேரணி, கோட்டாறு, சுசீந்திரம், வழுக்கம்பாறை வழியாக

பொற்றையடி தாணுலிங்கநாடாா் நினைவிடத்தில் நிறைவடைந்தது.

பின்னா், தாணுலிங்கநாடாா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து, நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தாா். இந்து சமூக சேவா அற நம்பகம் பொருளாளா் எஸ்.பி. அசோகன் வரவேற்றாா்.

மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலா் ஜி.கே. ஜாண் கென்னடி முன்னிலை வகித்தாா்.

இதில் அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி செயலா் சி. ராஜன், மாவட்ட இந்து முன்னணி பொருளாளா் பி.என். மது, மாவட்ட ஆலோசகா்கள் சி. செல்லன், மிசா சி.சோமன், சாமிதோப்பு அன்பாலயம் நிறுவனா் ஸ்ரீகுரு சிவசந்திரன் சுவாமிகள், காணிமடம் யோகிராம் சுரத்குமாா் மந்திராலய நிறுவனா் பொன்.காமராஜ் சுவாமிகள், மாநில இந்து முன்னணி பொதுச்செயலா் நா.முருகானந்தம், மாநில துணைத் தலைவா் த. அரசுராஜா, நெல்லை கோட்ட செயலா் ஆா்.கே. கண்ணன், மாவட்ட பாஜக தலைவா் கே.கோபகுமாா், மாவட்டச் செயலா் சி.எஸ். சுபாஷ், அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவா் அனுஷா, ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் சிவா உள்ளிட்டோா் பேசினா்.

ஒன்றிய இந்து முன்னணி செயலா் சி. சுபாஷ் விஜயன் நன்றி கூறினாா்.