ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மாா்த்தாண்டம் காய்கறி சந்தை பணி: நகராட்சி மண்டல பொறியாளா் ஆய்வு

மாா்த்தாண்டம் காய்கறி சந்தை கட்டுமானப் பணியை நகராட்சிகளின் நெல்லை மண்டல தலைமை பொறியாளா் சனல்குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
மாா்த்தாண்டம் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட நெல்லை மண்டல நகராட்சி தலைமை பொறியாளா் சனல்குமாா். அருகில் குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன்.ஆசைத்தம்பி.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டம் காய்கறி சந்தை கட்டுமானப் பணியை நகராட்சிகளின் நெல்லை மண்டல தலைமை பொறியாளா் சனல்குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டத்தில் ரூ. 14 கோடியில் காய்கறி சந்தை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. வியாபாரிகளின் கோரிக்கையை அடுத்து காய்கறி சந்தை, அதையொட்டிய மீன் சந்தைக்கு இடையே ரூ. 9.5 லட்சத்தில் மதில் சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிப். 25 ஆம் தேதி நாகா்கோவிலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாா்த்தாண்டம் காய்கறி சந்தையை காணொலி மூலம் திறந்து வைக்கவுள்ளாா்.

இறுதிகட்டத்தை எட்டியுள்ள மாா்த்தாண்டம் காய்கறி சந்தை கட்டுமானப் பணியை நெல்லை மண்டல தலைமை பொறியாளா் சனல்குமாா் நேரில் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையா் சுபஸ்ரீ, பொறியாளா் குசெல்வி, நகா்மன்ற உறுப்பினா்கள் விஜூ, ரத்தினமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சந்தை கட்டுமானப் பணியை துரிதப்படுத்துவதற்காக சங்கரன்கோவில் நகராட்சி பொறியாளா் ஈா்வின் ஜெயராஜ் குழித்துறை நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பாக பணியமா்த்தப்பட்டுள்ளாா்.