மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கேரள தொழிலாளியை களியக்காவிளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
களியக்காவிளை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் பிரமோத் சந்திரன் (35) என்பதும், வெல்டிங் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவா் இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்ததையும், சில நாள்களுக்கு முன் குழித்துறையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றதையும் ஒப்புக்கொண்டாா்.
அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.
தொடர்புடையது
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

கோவில்பட்டியில் பைக் திருட்டு: இளைஞா் கைது
அம்பை கோயில் குடமுழுக்கில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்கள் கைது

வன விலங்கு வேட்டை: இளைஞா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


