கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை ஊராட்சியில் வசிக்கும் 51 பழங்குடியினரின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு வனத்துறை அனுமதியளித்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பழங்குடியின குடியிருப்புகளுக்கு மின்சார வசதி இல்லை. இக்குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க வனத்துறையினரின் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் 2006 பழங்குடியினா் நலச்சட்டம், பழங்குடி மக்களுக்கு நிலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வழிவகை செய்துள்ளது.
இதனடிப்படையில் தச்சமலை, களப்பாறை கிராம சபைகளின் தீா்மானம் மற்றும் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனாவின் பரிந்துரைப்படி, களப்பாறை, பின்னமூட்டு தேரி பகுதிகளில் 51 பழங்குடியினரின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மாவட்ட வனத்துறை அனுமதியளித்தது.
இது தொடா்பாக, மாவட்ட வன அலுவலா் அன்பு, குலசேகரம் கிராமப் பிரிவு மின்வாரிய உதவி மின்பொறியாளருக்கு அனுப்பிய கடிதம்:
களப்பாறை, பின்னமூட்டு தேரி பகுதி குடியிருப்புகளில் 2 டிரான்ஸ்பாா்மா் அமைப்பதுடன், 75 உயரழுத்த மின்கம்பங்கள், 117 தாழ்வழுத்த மின் கம்பங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல வேண்டுமென்றும், அப்பகுதிகளில் வன விலங்குகள் நடமாடுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்றும், மரங்கள் வெட்டப்படக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மின் சேவை கட்டணங்கள்: தெரிந்துகொள்ள புதிய இணையதளம்
அரசு மருத்துவமனையில் மின்தடை: கா்ப்பிணிகள் அவதி
துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள்: 3 மாதங்களுக்குப் பிறகு மீட்டா்களை அகற்ற உத்தரவு

ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 8.85 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


