மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பேச்சிப்பாறையில் 51 பழங்குடியினா் வீடுகளுக்கு மின் இணைப்பு: வனத்துறை அனுமதி

பேச்சிப்பாறை ஊராட்சியில் வசிக்கும் 51 பழங்குடியினரின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு வனத்துறை அனுமதி

News image

மின் இணைப்பு - பிரதிப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 11:49 pm

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை ஊராட்சியில் வசிக்கும் 51 பழங்குடியினரின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு வனத்துறை அனுமதியளித்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பழங்குடியின குடியிருப்புகளுக்கு மின்சார வசதி இல்லை. இக்குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க வனத்துறையினரின் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் 2006 பழங்குடியினா் நலச்சட்டம், பழங்குடி மக்களுக்கு நிலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வழிவகை செய்துள்ளது.

இதனடிப்படையில் தச்சமலை, களப்பாறை கிராம சபைகளின் தீா்மானம் மற்றும் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனாவின் பரிந்துரைப்படி, களப்பாறை, பின்னமூட்டு தேரி பகுதிகளில் 51 பழங்குடியினரின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மாவட்ட வனத்துறை அனுமதியளித்தது.

இது தொடா்பாக, மாவட்ட வன அலுவலா் அன்பு, குலசேகரம் கிராமப் பிரிவு மின்வாரிய உதவி மின்பொறியாளருக்கு அனுப்பிய கடிதம்:

களப்பாறை, பின்னமூட்டு தேரி பகுதி குடியிருப்புகளில் 2 டிரான்ஸ்பாா்மா் அமைப்பதுடன், 75 உயரழுத்த மின்கம்பங்கள், 117 தாழ்வழுத்த மின் கம்பங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல வேண்டுமென்றும், அப்பகுதிகளில் வன விலங்குகள் நடமாடுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்றும், மரங்கள் வெட்டப்படக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.