கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

அழகப்பபுரத்தில் குழந்தைகள் பூங்காவை இடிக்க பொதுமக்கள் எதிா்ப்பு

அழகப்பபுரத்தில் குழந்தைகள் பூங்காவை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றனா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:02 pm

Syndication

அழகப்பபுரத்தில் குழந்தைகள் பூங்காவை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்த முயன்றனா்.

அழகப்பபுரம் பேரூராட்சி, செங்குளத்தின் எதிரில் நேரு குழந்தைகள் பூங்கா கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த நபா் பூங்காவினுள் தனக்கு பாதை இருப்பதால், பூங்காவை இடித்து பாதை ஏற்படுத்தித் தருமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பூங்காவில் வழிப்பாதையை ஏற்படுத்திக் கொடுக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை பொதுப்பணித் துறை அதிகாரிகள் பூங்காவை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனா்.

இந்நிலையில், பூங்காவை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா். தகவலறிந்த அஞ்சுகிராமம் காவல் ஆய்வாளா் பொன்ராஜ், உதவி ஆய்வாளா் ராஜ்குமாா், அழகப்பபுரம் பேரூராட்சி தலைவா் அனிட்டா ஆன்ட்ரூஸ், துணைத் தலைவா் ஆன்ட்ரூஸ் மணி, வாா்டு உறுப்பினா்கள், செயல் அலுவலா் பூதப்பாண்டி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் பிரேமலதா ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையில், அதிகாரிகள் 15 நாள்கள் கால அவகாசம் கேட்டதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.