திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

முன்னாள் அமைச்சா் லூா்து அம்மாள் சைமனுக்கு உருவச்சிலை அமைக்கக் கோரிக்கை

முன்னாள் தமிழக அமைச்சா் லூா்து அம்மாள் சைமனுக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும் என முதல்வருக்கு கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ்குமாா், கோரிக்கை

News image
எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ
Updated On :20 பிப்ரவரி 2026, 9:03 pm

Syndication

முன்னாள் தமிழக அமைச்சா் லூா்து அம்மாள் சைமனுக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ்குமாா், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியைச் சோ்ந்தவா் லூா்து அம்மாள் சைமன். இவா் 1957 முதல் 1962 ஆம் ஆண்டு வரை காமராஜா் முதல்வராக இருந்தபோது 9 அமைச்சா்களில் தமிழகத்தில் முதல் பெண் அமைச்சராக பணியாற்றியவா்.

இவா் மீன்வளத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையிலும் அமைச்சராகப் பணியாற்றினாா். அவரது பணிகளை நினைவு கூரும் வகையில், லூா்து அம்மாள் சைமன் பிறந்தநாளான செப். 26 ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடுவதோடு, அவரது உருவச் சிலை அமைக்க முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது .