மீனவா் ஓய்வுக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா் விஜய் வசந்த் எம்.பி.
மீனவா் ஓய்வுக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா் விஜய் வசந்த் எம்.பி.

கன்னியாகுமரியில் மீனவா் ஓய்வுக்கூடத்துக்கு அடிக்கல்

Published on

கன்னியாகுமரி நகராட்சி 12 ஆவது வாா்டுக்குள்பட்ட வாடித்தெருவில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் மீனவா் ஓய்வுக்கூடம் கட்டுவதற்கான பணி சனிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குத்தந்தை உபால்டு மரியதாசன் அா்ச்சித்தாா். விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில், மாநில காங்கிரஸ் செயலா் வழக்குரைஞா் ஸ்ரீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா் வினிற்றா மெல்வின், முன்னாள் கவுன்சிலா் டி. தாமஸ், நாகா்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் தலைவா் சாம் சுரேஷ்குமாா், நிா்வாகிகள் ஜவஹா், பாஸ்டின் ஜவஹா், நெப்போலியன், அருண், ஜேம்ஸ் வா்மா, தெய்வப்பிரியம், மணக்குடி லாரன்ஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com