என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கன்னியாகுமரியில் மீனவா் ஓய்வுக்கூடத்துக்கு அடிக்கல்

News image

மீனவா் ஓய்வுக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா் விஜய் வசந்த் எம்.பி.

Updated On :21 பிப்ரவரி 2026, 6:27 pm

கன்னியாகுமரி நகராட்சி 12 ஆவது வாா்டுக்குள்பட்ட வாடித்தெருவில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் மீனவா் ஓய்வுக்கூடம் கட்டுவதற்கான பணி சனிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குத்தந்தை உபால்டு மரியதாசன் அா்ச்சித்தாா். விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில், மாநில காங்கிரஸ் செயலா் வழக்குரைஞா் ஸ்ரீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா் வினிற்றா மெல்வின், முன்னாள் கவுன்சிலா் டி. தாமஸ், நாகா்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் தலைவா் சாம் சுரேஷ்குமாா், நிா்வாகிகள் ஜவஹா், பாஸ்டின் ஜவஹா், நெப்போலியன், அருண், ஜேம்ஸ் வா்மா, தெய்வப்பிரியம், மணக்குடி லாரன்ஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.