கைது
கைதுபிரதிப் படம்

நாகா்கோவிலில் கஞ்சா விற்ற 3 போ் கைது

Published on

நாகா்கோவிலில் கஞ்சா விற்ற 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1.36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நாகா்கோவில் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அதில் சாமிதோப்பு பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் தனுஷ் கிருஷ்ணா (22), பீச் ரோடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் விஷால் (18), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ராஜேஷ் சவுகான் ஆகியோரிடமிருந்து 1 கிலோ 360 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனா். மேலும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Dinamani
www.dinamani.com