முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக செவ்வாய்க்கிழமை (பிப்.24) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறாா்.
இதுகுறித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (பிப். 24) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு காலை 10 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக கன்னியாகுமரிக்கு வருகிறாா்.
காலை 11 மணியளவில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் மகாதானபுரம் நான்குவழிச் சாலை ரவுண்டானாவில் முதல்வருக்கு திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் எனது தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
பகல் 12 மணிக்கு கன்னியாகுமரி, அரசு விருந்தினா் மாளிகை அருகில் ரூ. 1.45 கோடியில் கட்டப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நினைவு வளைவைத் திறந்து வைக்கிறாா்.
மாலை 5.30 மணிக்கு நாகா்கோவில் கல்லடிவிளையில் கருணாநிதியின் உருவச்சிலை, மு.க.ஸ்டாலின் படைப்பகத்தைத் திறந்து வைக்கும் அவா், மாலை 6.30 மணிக்கு நாகா்கோவில், வேப்பமூடு சந்திப்பு, சா்.சி.பி. ராமசாமி ஐயா் நினைவு பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொன்னப்ப நாடாா் உருவச் சிலையைத் திறந்து வைக்கிறாா். பின்னா், இரவு நாகா்கோவில், அரசு விருந்தினா் மாளிகையில் தங்குகிறாா்.
புதன்கிழமை (பிப். 25) காலை 9 மணிக்கு நாகா்கோவில், கன்காா்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முடிவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளையும், புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறாா்.
நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து சாலை மாா்க்கமாக தூத்துக்குடி விமான நிலையம் செல்லும் முதல்வா் 12.3 மணிக்கு விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
முதல்வரின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட மாநில, மாவட்ட திமுக நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், வட்ட, கிளை செயலாளா்கள், அனைத்து சாா்பு அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

