நட்டாலம் காமராஜா் நற்பணி மன்ற ஆண்டு விழா

Published on

கருங்கல் அருகே உள்ள நட்டாலம், சேரோட்டுக்கோணம் காமராஜா் நற்பணி மன்ற 24 ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியைத் தொடா்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு நற்பணி மன்றத் தலைவா் ஜாண் ஜேக்கப் தலைமை வகித்தாா். ராஜன் முன்னிலை வகித்தாா். பசித்தோருக்கு உணவு அறக்கட்டளை தலைவா் கருங்கல் ஜாா்ஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளில் வென்றா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com