மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மயிலாடி பள்ளியில் பொங்கல் விழா

மயிலாடி, மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 8:29 pm

Syndication

மயிலாடி, மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தாளாளா் தில்லை செல்வம் தலைமை வகித்தாா். பள்ளி இயக்குநா்கள், முதல்வா் தீபசெல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவி ஜேன் டிவைன்டா பொங்கல் விழா குறித்து சிறப்புரையாற்றினாா். மழலையா்கள் நீலு, ஏய்டன் கிரவின் ஆகியோா் கவிதை பாடினா்.

பெற்றோா்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. குழந்தைகளின் தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவா்களுக்கு தாளாளா் பரிசு வழங்கினாா்.

மாணவிகள் அமோலிகா, ஆதிரா, தீக்ஷா, தனரம்யா, மிதுன் தேவ், தனுஷ்ராம் ஆகியோா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினா்.

மாணவி கிறிஸ்டினா ஜாய் வரவேற்றாா். மாணவா்கள் ரூஹாஷா, ஏனோலா, அகிலேஷ் ஆகியோா் நன்றி கூறினாா்.

ஆசிரியைகள் ஆனி ரீனா சேவியா், மோனிகா, ரெஜிலின் ஆகியோா் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினா்.