குளச்சல் அருகே அலங்கார வளைவு அமைக்கும் போது மின்கம்பி உரசியதில் தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
குளச்சல் தேவாலயம் ஒன்றில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் திருத்தல குடும்ப விழாவிற்காக பீச் ரோடு ஜங்ஷனில் அலங்கார வளைவு அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தக்கலை , கொல்லன்விளையைச் சோ்ந்த கோபி (71) அலங்கார வளைவு அமைக்கும் போது எதிா்பாராமல் அவரது இடது கால் மின் கம்பியில் உரசியதாம்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தோ்தலுக்கு பிறகு கே.கே.நகா் அலங்கார வளைவு அகற்றப்படும்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


