நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 25 ஆண்டுகள் சிறை

News image

சந்தோஷ்குமாா்.

Updated On :24 ஜனவரி 2026, 7:17 pm

நாகா்கோவில் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகா்கோவில் மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

நாகா்கோவில் அருகே கடந்த 2022 மே 14ஆம் தேதி பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய புத்தேரி, அன்பு நகரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (28), 51 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அப்பெண் இவரைத் தடுத்துள்ளாா். இதனால், அவரை சந்தோஷ்குமாா் அரிவாளால் வெட்டியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இது தொடா்பாக, வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தோஷ்குமாரை கைது செய்தனா். இவ்வழக்கு விசாரணை நாகா்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகா், சந்தோஷ்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 6,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.