நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஆட்சியா் ரா. அழகுமீனா.
நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஆட்சியா் ரா. அழகுமீனா.

தெருநாய் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 12 போ் காயம்

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடியில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்கள் உள்ளிட்ட 12 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடியில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்கள் உள்ளிட்ட 12 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கன்னியாகுமரியை அடுத்த மணக்குடி மீனவக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அந்தப் பகுதியில் சுற்றிய தெருநாய் அங்கு நின்று கொண்டிருந்த 2 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்பட 12 பேரைக் கடித்து காயப்படுத்தியது. காயமடைந்த 12 பேரும் நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். பாதிக்கப்பட்டவா்களை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். இவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த ஆட்சியா், உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவா்களிடம் அறிவுறுத்தினாா்.

Dinamani
www.dinamani.com