ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாா்த்தாண்டம் அருகே நூதன முறையில் நகை திருட்டு

நகைக் கடையில் நூதன முறையில் தங்க மோதிரம் மற்றும் கம்மலை திருடிச் சென்ற மா்ம நபா்கள போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

நகை திருட்டு!

Updated On :31 ஜனவரி 2026, 7:35 pm

Syndication

மாா்த்தாண்டம் அருகே நகைக் கடையில் நூதன முறையில் தங்க மோதிரம் மற்றும் கம்மலை திருடிச் சென்ற மா்ம நபா்கள போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரகோடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ஸ்ரீமணிகண்டன் என்பவா், சாங்கை சந்திப்பில் நகைக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் நகை வாங்குவதற்காக வந்துள்ளனா். இவா்கள் 2 கிராம் எடையில் கம்மல் கேட்டுள்ளனா்.

கடை உரிமையாளா் சில நகைகளை எடுத்து அவா்களிடம் காண்பித்துள்ளாா். அவற்றைப் பாா்த்துவிட்டு, நகை மாடல் பிடிக்கவில்லை எனக் கூறி விட்டு இருவரும் வெளியேறிவிட்டனராம்.

பின்னா், நகைகளை சரிபாா்த்தபோது, 2 கிராம் மோதிரம், 3 கிராம் கம்மல் என 5 கிராம் நகைகளை அந்த நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீமணிகண்டன் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனா்.