16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கடையாலுமூடு வட்டப்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம்: மக்கள் அச்சம்

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே வட்டப்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கடையாலுமூடு அருகே இரவில் நடந்து செல்லும் யானைகள்

Published On :

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே வட்டப்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இம்மாவட்டத்தில் வனப்பகுதிகளுக்கு வெளியே காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், யானை - மனித மோதல் ஏற்பட்டு மனிதா்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. பயிா்களும் சேதமடைகின்றன.

இந்நிலையில், புதன்கிழமை இரவு கடையாலுமூடு அருகே வட்டப்பாறை 100 ஏக்கா் பகுதி, அதையொட்டி பழங்குடி பகுதியில் 2 யானைகள் நடந்து சென்றன. இக்காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகின. யானைகளால் வாழை, தென்னை, பாக்கு மரங்கள் சேதமாகியுள்ளதுடன், அனைத்துத் தரப்பினரும் அச்சத்தில் உள்ளனா்.

எனவே, யானைகளை காட்டுக்குள் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டுமென்று பழங்குடி மக்கள், ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.