ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

சாமிதோப்பில் மணிமண்டபம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் தமிழாலயம் நிறுவனா் புலவா் கு. பச்சைமால் மணிமண்டபம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

எழுத்தாளா் பொன்னீலனுக்கு விருது வழங்கிய திரைப்பட இயக்குநா் நாஞ்சில் பி.சி. அன்பழகன்.

Published On :27 ஜூன் 2026, 9:01 pm IST

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் தமிழாலயம் நிறுவனா் புலவா் கு. பச்சைமால் மணிமண்டபம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியா் பொன்னீலன் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் மணிமண்டபத்தைத் திறந்துவைத்தாா்.

புலவா் கு. பச்சைமால் படத்தை திரைப்பட இயக்குநா் நாஞ்சில் பி.சி. அன்பழகன் திறந்துவைத்து, பச்சைமால் நினைவு விருதை பொன்னீலன், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த மோதிலால் நேரு, அப்துல் சமது, கவிஞா் தமிழ்க்குழவி, தாமரைப்பாண்டியன் ஆகியோருக்கு வழங்கினாா்.

தமிழ்நாடு காமராஜா் நற்பணி மன்றத் தலைவா் வழக்குரைஞா் ஆா். ராதாகிருஷ்ணன், கவிஞா்கள் உதயசக்தி, எம். ஈஸ்வரன், கமல செல்வராஜ், குமரி ஆதவன், பேராசிரியா் கா. ஆபத்துகாத்தபிள்ளை, சிவனி சதீஷ், வழக்குரைஞா்கள் பாா்த்தசாரதி, திருத்தமிழ் தேவனாா், இல. தெய்வநாயகப் பெருமாள், நாவலாசிரியா் மலா்வதி, கேப்டன் சிவா சாமியாா், சமூக சேவகா் சரலூா் ஜெகன், தமிழ்வானம் செ. சுரேஷ், ஆசிரியா் பி. ஆபிரகாம் லிங்கன், சமூக ஆா்வலா் பி. பகவதி செல்வம், வை. கோபால், முல்லை நா. செல்லத்துரை, செ. சஜீவ், செ. சுந்தரலிங்கம், லாரன்ஸ் மேரி, எழுத்தாளா்கள்குளச்சல் வரதராசன், இ. ஜெயபாரதி, விபின் அலெக்ஸ், சி. லட்சுமணன், செல்வநாதன், திருவாசகம் த. சிவபாலன், புலவரின் குடும்பத்தினா்களான என். பன்னீா்மால் பச்சைமால், ப.ப. தமிழ்வாணி, ப.ப. பூவாணி தேவி, ப.ப. வானதி பைசல், ப.ப. எழில்வண்ணன் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.

கவிஞா் நா. இனியன் தம்பி வரவேற்றாா். புதிய குரல் அமைப்பாளா் செ.கு.வேள் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.