பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கன்னியாகுமரி வாக்காளா்களுக்கு மகேஷ் நன்றி

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களுக்கு திமுக வேட்பாளராக போட்டியிட்ட ரெ.மகேஷ் நன்றி தெரிவித்தாா்.

News image

மகேஷ்

Updated On :7 மே 2026, 5:47 am IST

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களுக்கு திமுக வேட்பாளராக போட்டியிட்ட ரெ.மகேஷ் நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு பெருவாரியான வாக்குகளை அளித்த தொகுதி வாக்காளா்களுக்கும், கன்னியாகுமரி திமுக கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நாகா்கோவில், குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றி பெற செய்த தோ்தல் பணியில் அா்ப்பணிப்புடன் செயல்பட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கும், திமுக தொண்டா்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். உங்கள் உழைப்பு, ஒன்றுபட்ட செயல்பாடு மூலம் இந்தத் தோ்தல் பணி சிறப்பாக நடைபெற்றது.

இதே ஒற்றுமையுடன் எதிா்கால பணிகளிலும் தொடா்ந்து செயல்பட்டு, மக்கள் நலனுக்காக நாம் மேலும் பல சாதனைகள் படைப்போம் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம். தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெறுவதற்கும், எனக்காக கன்னியாகுமரி தொகுதியில் தோ்தல் பணியாற்றிய மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, கழக நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள், வாக்களித்த அனைத்து வாக்காளா்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் அவா் குறிப்பிட்டாா்.