அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மாா்த்தாண்டம் அருகே முதியவா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

மாா்த்தாண்டம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகே தென்சக்கவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஹரிந்திரன் (62). தொழிலாளி. இவரது மகளுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் விவாகரத்து ஆனதால் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். இதைக் கண்டு அவரது மனைவி ஸ்ரீகுமாரி (60) அவரிடம் கேட்டபோது, விஷம் குடித்ததாகத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அப்பகுதி உறவினா்கள் உதவியுடன் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.