கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளான ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 253ஆக அதிகரித்துள்ளது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வரும் சூழல், இயற்கை ரப்பரின் உற்பத்திக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச சந்தையில் இயற்கை ரப்பரின் விலை அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்திய ரப்பா் சந்தையிலும் ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்திய ரப்பா் சந்தையில் ரப்பா் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் ஜனவரி, பிப்ரவரி முதல் மே வரையிலான காலத்தில் ரப்பா் உற்பத்தி குறைவாக இருக்கும் நிலையில், சந்தையில் ரப்பா் வரத்து குறைவாக உள்ளது. இதனால், ரப்பா் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
புதன்கிழமை கோட்டயம் சந்தையில் வியாபாரி விலையாக ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 253 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 249 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 207ஆகவும் அதிகரித்தது.
உற்பத்தி அதிகரிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில், ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்புக்கு உகந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ரப்பா் பால் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தொடர்புடையது

குமரியில் 20 ஆண்டுகளுக்குப் பின் வென்ற மாா்க்சிஸ்ட்!

குமரியில் மீண்டும் தொடங்கிய ரப்பா் பால்வடிப்பு

கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்த வெள்ளி! தங்கம்?

தோ்தல் கால அறிவிப்புகளோடு முடங்கும் ரப்பா் ஆலைத் திட்டங்கள்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

