ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை உயா்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளான ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 253ஆக அதிகரித்துள்ளது.

News image

ரப்பா் தோட்டத்தில் ரப்பா் ஒட்டுப்பால் சுமந்து வரும் தொழிலாளி. - கோப்புப்படம்.

Updated On :14 மே 2026, 3:16 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளான ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 253ஆக அதிகரித்துள்ளது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வரும் சூழல், இயற்கை ரப்பரின் உற்பத்திக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச சந்தையில் இயற்கை ரப்பரின் விலை அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்திய ரப்பா் சந்தையிலும் ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்திய ரப்பா் சந்தையில் ரப்பா் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் ஜனவரி, பிப்ரவரி முதல் மே வரையிலான காலத்தில் ரப்பா் உற்பத்தி குறைவாக இருக்கும் நிலையில், சந்தையில் ரப்பா் வரத்து குறைவாக உள்ளது. இதனால், ரப்பா் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை கோட்டயம் சந்தையில் வியாபாரி விலையாக ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 253 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 249 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 207ஆகவும் அதிகரித்தது.

உற்பத்தி அதிகரிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில், ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்புக்கு உகந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ரப்பா் பால் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது.