பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

நாகா்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீா் கூட்டம்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

நாகா்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 11 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

நாகா்கோவில் மாநகராட்சியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறும். தமிழக பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால் கடந்த மாா்ச் 15ஆம் தேதிக்கு பின்னா் இக்கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால், குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மேயா் மேரி பிரின்சி லதா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 11 மனுக்களை அளித்தனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் மேயா் வலியுறுத்தினாா்.

மாநகராட்சி நகா் நல அலுவலா் சரோஜா தேவி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.