சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

அருமனை அருகே சாலையோரம் தொழிலாளி சடலம் மீட்பு

அருமனை அருகே சாலையோரம் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 1:37 am IST

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சாலையோரம் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

அருமனை சந்திப்பு அருகே ஆண் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், அருமனை போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

விசாரணையில் அவா், மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த மீன்பிடித் தொழிலாளியான கிளீட்டஸ் (48) எனவும், மதுப் பழக்கமுள்ள அவா் அருமனை அருகேயுள்ள உறவினா் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு வந்ததாகவும், ஆனால், அங்கு செல்லாமல் சாலையோரம் படுத்திருந்த நிலையில் இறந்துகிடந்ததாகவும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.