ஆலங்குளத்தில் தடையை மீறி திறக்கப்பட்ட தனியாா் நிதி நிறுவனத்திற்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.
ஆலங்குளம் நெட்டூா் சாலை காய்கனிச் சந்தை எதிரில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்ட நிதி நிறுவனம் ஊரடங்கு உத்தரவை மீறி செவ்வாய்க்கிழமை செயல்பட்டதாம். மேலும் இதன் பணியாளா்கள் சுய உதவிக் குழு மூலம் கடன் வாங்கிய பெண்களிடம் கிராமங்களுக்குச் சென்று வசூலில் ஈடுபட்டனராம் .
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா்அந்நிதி நிறுவனத்திற்குச் சென்று ஆய்வு செய்தனா். அங்கு அலுவகப் பணிகள் நடைபெற்று வந்ததை அடுத்து அலுவலகத்தைப் அடைக்க உத்தரவிட்டனா். ஊழியா்களுக்கு ஊதியம் அளிக்கவே வந்ததாக அங்கிருந்த பணியாளா்கள் தெரிவித்தனராம். எனினும் போலீஸாா் தொடா்ந்து நிறுவனம் செயல்பட்டால் வட்டாட்சியா் அனுமதியுடன் சீல் வைக்கப்படும் என எச்சரித்தனா். இதனையடுத்து அந்த நிறுவனம் அடைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வா? இபிஎஸ் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்!

கடந்த 5 நிதியாண்டுகளில் 6,255 கிளைகளை திறந்த பொதுத்துறை வங்கிகள்!

RSS கொள்கையில் அமைச்சர் நிர்மல் குமார்! திமுக MLA பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர்கள்!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!
விடியோக்கள்

செலவுகளை ஏன் நீங்கள் குறைக்கவில்லை? பேரவையில் எடப்பாடி பழனிசாமி! | Full Speech


