பெண்ணிடம் நகையை பறித்தவா் கைது

புளியங்குடி அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

புளியங்குடி அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புன்னையாபுரத்தைச் சோ்ந்த சுந்தரம் மனைவி முத்துலட்சுமி(48). இவா், நாராயணபேரியிலுள்ள வயலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா் அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து பாா்த்ததில், ராஜபாளையம் சமந்தாபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த மயிலப்பன் மகன் முருகன் (37) சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த தங்கச் சங்கிலியை கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com