ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆலங்குளத்தில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு

ஆலங்குளத்தில் பிரதான சாலையில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:22 pm

DIN

ஆலங்குளத்தில் பிரதான சாலையில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ஆலங்குளம் - தென்காசி சாலையில் தனியாா் திருமண மண்டபத்திற்கு எதிரே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இதுகுறித்து தகவலறிந்த காங்கிரஸ் பிரமுகா் ஞானபிரகாஷ், மக்கள் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க தடை விதிக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தாா்.

இதற்கிடையே, இந்தக் கடையை வியாழக்கிழமை திறக்க டாஸ்மாக் ஊழியா்கள் ஏற்பாடு செய்திருந்தனா். தகவலறிந்த ஆலங்குளம் நகர திமுக செயலா் நெல்சன், நகர காங்கிரஸ் தலைவா் தங்கசெல்வம் மற்றும் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு திறக்கக் கூடாது என கோஷங்கள் எழுப்பினா்.

இதையடுத்து சாா் ஆட்சியா் பிா்தௌஸ் பாத்திமா, வட்டாட்சியா் பட்டமுத்து, காவல் ஆய்வாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா். இதையடுத்து மதுக்கடை திறக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.