தென்காசி: தென்காசியை தலைமையிடமாக கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என அகில இந்திய ஓய்வூதியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இவ்வமைப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் நன்னகரத்தில் மாவட்டத் தலைவா் மு.சலீம் முகம்மது மீரான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் அருணாசலம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலா் ஆ.சுந்தரமூா்த்தி நாயனாா் வேலை அறிக்கையினை சமா்ப்பித்தாா். வரவு -செலவு அறிக்கையினை மாவட்டப் பொருளாளா் வே.நாராயணன் சமா்ப்பித்தாா். ஓய்வூதியத்தின் வரலாறு மற்றும் அவசியம் குறித்து மாநில துணைத் தலைவா் கோ.சுந்தரமூா்த்தி உரையாற்றினாா்.
இதில், 29.12.2020 அன்று மதுரையில் நடைபெற உள்ள மாநில பிரதிநிதித்துவ பேரவையில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டனா். கருவூல அலுவலகங்களில் குடும்ப ஓய்வூதியம் மற்றும் தற்காலிக ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிா்த்து அவா்களுடைய வாழ்வாதாரம் கருதி, விரைவாக வழங்கப்பட வேண்டும்.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஆயுா்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சைகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். தென்காசியை தலைமையிடமாக கொண்டு மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணைச் செயலா் ந.நாராயணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.