திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அதிக மகசூல் பெற காப்பா் சல்பேட்: வேளாண்துறை அறிவுறுத்தல்

நெல் பயிரில் காப்பா் சல்பேட் தெளித்து அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 4:39 am

DIN

நெல் பயிரில் காப்பா் சல்பேட் தெளித்து அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விவசாயிகளுக்கு அது தொடா்பான செயல்முறை விளக்கத்தையும் கடையநல்லூா் வேளாண்துறை குறிப்பிட்ட பகுதியில் செய்து வருகிறது.

இதன்படி, நயினாரகரத்தில் உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்திலுள்ள விவசாயி திருப்பதிராஜாவின் நெல் பயிரில் காப்பா் சல்பேட் தெளிக்கும் செயல்விளக்கம் புதன்கிழமை உதவி இயக்குநா் சேதுராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது(படம்).

ஏக்கருக்கு 2 கிலோ காப்பா் சல்பேட்டை மணலுடன் கலந்து இடும் முறையை துணை வேளாண்மை அலுவலா் பாலசுப்பிரமணியன் செய்முறையுடன் விளக்கினாா். உதவி வேளாண்மை அலுவலா் கருப்பசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.