ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘ஐரோப்பாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை அவசியம்’

ஐரோப்பிய நாடுகளிலிருந்து தென்காசி மாவட்டத்துக்கு வரும் பயணிகள் தாங்களாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தென்காசி ஆட்சியா் கீ.சு.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:11 pm

DIN

ஐரோப்பிய நாடுகளிலிருந்து தென்காசி மாவட்டத்துக்கு வரும் பயணிகள் தாங்களாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தென்காசி ஆட்சியா் கீ.சு.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜரோப்பிய நாடுகளில் இருந்த வரும் பயணிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வந்த நாள் முதல் 14 நாள்களுக்கு சுயமாக தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் காய்ச்சல், சளி, தொடா் இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.

கொதிக்க வைத்த குடிநீரை பருகுதல், முகக் கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகளை உட்கொள்ளுதல், அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிா்த்தல் போன்ற நடைமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.