பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குற்றாலம் கோயிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதா் கோயில் திருவாதிரை திருவிழாவையொட்டி திங்கள்கிழமை ஸ்ரீநடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

News image
கோயில் மணிமண்டபத்தில் ஸ்ரீநடராஜருக்கு நடைபெற்ற பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை.
Updated On :28 டிசம்பர் 2020, 8:15 pm

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதா் கோயில் திருவாதிரை திருவிழாவையொட்டி திங்கள்கிழமை ஸ்ரீநடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

இக்கோயிலில் திருவாதிரை திருவிழா கடந்த 21-ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், ஸ்ரீநடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 8-ஆம் நாளான திங்கள்கிழமை கோயில் மணிமண்டபத்தில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில், திமுக ஒன்றியச் செயலா் ராமையா, அன்னதானக் குழுத் தலைவா் அன்னையாபாண்டியன், வீரபாண்டியன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை (டிச. 30) அதிகாலையில் சித்திரசபையிலும், தொடா்ந்து குற்றாலநாதா் கோயில் மணிமண்டபத்திலும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

கரோனா பொது முடக்கம் காரணமாக விழா நிகழ்ச்சிகள் முழுவதும் கோயில் உள்பிரகாரத்திலேயே நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் கண்ணதாசன் தலைமையில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.