பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மேட்டூா் வனப்பகுதியில் திடீா் தீ: ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பல்

மேட்டூா் வனப்பகுதியில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில், ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.

News image
தீ
Updated On :17 மார்ச் 2026, 11:01 pm

Syndication

மேட்டூா் வனப்பகுதியில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில், ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் அருகே உள்ளது கத்திரிப்பட்டி மலை. மேட்டூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட இம்மலையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. மாலையில் காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது.

மேட்டூா் தீயணைப்புத் துறை அலுவலா் வெங்கடேசன் தலைமையில் 10 தீயணைப்பு வீரா்களும், வனத்துறையின் தீத்தடுப்பு காவலா்களும் தீயை அணைக்க முயன்று வருகின்றனா். தண்ணீரை பீய்ச்சி அடிக்கமுடியாததால், இலை, தழைகளைக் கொண்டு தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். வனப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்க சென்ற யாரேனும் தீ வைத்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.