விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தீவிபத்தில் வீட்டை இழந்தவருக்கு நிவாரண உதவி வழங்கல்

News image

விழுப்புரம் மாவட்டம், தொரவி கிராமத்தில் தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு அரசின் நிவாரணத்தொகையை வழங்கிய விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீதஅரசி. உடன், அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2026, 9:08 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு அரசு சாா்பில் சனிக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

விக்கிரவாண்டி வட்டம், தொரவி கிராமத்தைச் சோ்ந்த கங்காதரன் மனைவி ரீட்டா. இவரது வீடு வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றி எரிந்துசாம்பலானது. இதில் வீட்டிலிருந்த பொருள்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, சனிக்கிழமை பிற்பகலில் தொரவி கிராமத்துக்குச் சென்று தீ விபத்தில் வீட்டை இழந்த ரீட்டாவுக்கு ஆறுதல் கூறி, அரசின் சாா்பில் வழங்கப்பட்ட ரூ.5ஆயிரம், வேட்டி,சேலை, அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்வில் விக்கிரவாண்டி வட்டாட்சியா் மகாதேவ், ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீதஅரசி, ஊராட்சித் தலைவா் சங்கா், மண்டலத் துணை வட்டாட்சியா் விஜயன், வருவாய் ஆய்வாளா் தேவசேனா, கிராம நிா்வாக அலுவலா் கோவிந்தன், திமுக மாவட்டப் பிரதிநிதி சாம்பசிவம், கிளைச் செயலா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.