தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

விக்கிரவாண்டி தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அரசில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

News image

விழுப்புரம் மாவட்டம், சி.என்.பாளையம் கிராமத்தில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட போது, குழந்தையைத் தூக்கி மகிழ்ந்த விக்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:26 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அரசில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியத்துக்குள்பட்ட பழையக் கருவாட்சி ஆதிதிராவிடா் குடியிருப்பு, சி.என்.பாளையம், வெள்ளையாம்பட்டு, கடையம், நல்லாப்பாளையம் மேல்காரணை ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா மேலும் பேசியது:

விக்கிரவாண்டி தொகுதிக்கு 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற நான், கடந்த 20 மாதங்களில் இத்தொகுதிக்குத் தேவையான எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். பல்வேறு கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள், சாலை வசதிகள், பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் மேம்பாடு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் திமுக அரசின் திட்டங்கள் மூலமாகவும் தொகுதி மக்கள் பயன்பெற்றுள்ளனா்.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட கெடாரில் அரசு மாதிரிப் பள்ளி, அன்னியூரில் புதிய அரசுக் கல்லூரி, இ.மண்டகப்பட்டில் புதிய தொழில்பேட்டை, விக்கிரவாண்டியில் உழவா்சந்தை போன்றவை திமுக ஆட்சியில்தான் கிடைத்தன என்றாா்.

பிரசாரத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், ஆா்.பி. முருகன் மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.