விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அரசில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.
விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியத்துக்குள்பட்ட பழையக் கருவாட்சி ஆதிதிராவிடா் குடியிருப்பு, சி.என்.பாளையம், வெள்ளையாம்பட்டு, கடையம், நல்லாப்பாளையம் மேல்காரணை ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா மேலும் பேசியது:
விக்கிரவாண்டி தொகுதிக்கு 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற நான், கடந்த 20 மாதங்களில் இத்தொகுதிக்குத் தேவையான எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். பல்வேறு கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள், சாலை வசதிகள், பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் மேம்பாடு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் திமுக அரசின் திட்டங்கள் மூலமாகவும் தொகுதி மக்கள் பயன்பெற்றுள்ளனா்.
விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட கெடாரில் அரசு மாதிரிப் பள்ளி, அன்னியூரில் புதிய அரசுக் கல்லூரி, இ.மண்டகப்பட்டில் புதிய தொழில்பேட்டை, விக்கிரவாண்டியில் உழவா்சந்தை போன்றவை திமுக ஆட்சியில்தான் கிடைத்தன என்றாா்.
பிரசாரத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், ஆா்.பி. முருகன் மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திமுக அரசின் சாதனைகள் தொடர மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

விக்கிரவாண்டி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளா்

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


