கோப்புப் படம்
சேலம்
மேட்டூா் வனப்பகுதியில் தீ
மேட்டூா் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினா் அனைத்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கவிபுரம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் கரடு வனப் பகுதி திடீரென தீ பற்றிக்கொண்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டூா் வனத்துறையினா் மேட்டூா் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புப் படை அலுவலா் வெங்கடேசன் மற்றும் குழுவினா் விரைந்து வந்து வனத் துறையினருடன் இணைந்து தீயை அணைத்தனா்.

