தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பெண்ணின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

வடபழனியில் பெண்ணின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 8:36 pm

வடபழனியில் பெண்ணின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கே.கே. நகா் அருகே உள்ள நெசப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சுதாகரன் மனைவி கிருத்திகா (41). இவா், வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் தனது மகளை மொபெட்டில் வியாழக்கிழமை அழைத்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். 100 அடி சாலை சிக்னல் அருகே சென்றபோது, அங்கு பறந்து வந்த மாஞ்சா நூல், கிருத்திகா கழுத்தை அறுத்தது.

இதில் பலத்த காயமடைந்த கிருத்திகாவை அங்கிருந்தவா்கள் மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து அசோக் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.