ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம்

கடையநல்லூா் பேரவைத் தொகுதி இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினா் சோ்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:40 pm

DIN

கடையநல்லூா் பேரவைத் தொகுதி இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினா் சோ்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலா்கள் முத்துப்பாண்டியன், செல்லப்பன், சங்கரபாண்டியன், பேரூா் செயலா் சுசிகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் எம்.கே. முருகன் வரவேற்றாா்.

மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி பேசியது; தென்காசி வடக்கு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கடையநல்லூா், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் ஆகிய 3 பேரவைத் தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினா்களை சோ்க்கும் செயலா்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் மாவட்டம் சாா்பில் ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் முதல்வா் மற்றும் துணை முதல்வா் முன்னிலையில் வழங்கப்படும். விரைவாக உறுப்பினா்களை சோ்க்கும் செயலா்களுக்கும் ஊக்கப் பரிசு வழங்கப்படும் என்றாா் அவா்.

ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் ராஜலட்சுமி உறுப்பினா் சோ்க்கை படிவங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா, முன்னாள் எம்எல்ஏ சுப்பையாபாண்டியன், மாவட்ட மகளிரணிச் செயலா் சுவா்ணா, முன்னாள் மாவட்ட துணைச் செயலா் வி.பி.மூா்த்தி, மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், இளைஞரணி துணைத் தலைவா் ஜெயமாலன், கடையநல்லூா் நகர எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் முத்துகிருஷ்ணன், நகர அவைத் தலைவா் ஐவா்குலராஜா, நகர இளைஞா் பாசறைச் செயலா் பால்பாண்டி, நகர இளைஞரணிச் செயலா் ராஜேந்திரபிரசாத், மாணவரணிச் செயலா் செங்கலமுடையாா் , ஜெயலலிதா பேரவைச் செயலா் முத்தையா பாண்டியன், ராசி சரவணன், எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் புகழேந்தி, வடகரைராமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.