விஸ்வநாதப்பேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சிவகிரி சுற்று வட்டாரத்தில் திங்கள்கிழமை (அக்.19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகிரி, தேவிப்பட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்குசத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், தொத்தாடைப்பட்டி, வடுகப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் நாகராஜன் தெரிவித்துள்ளாா்.