தென்காசி மாவட்டத்தில் கரோனா, டெங்கு பரவலைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம்
தென்காசி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரானா, டெங்கு பரவலைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


தென்காசி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரானா, டெங்கு பரவலைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா்கீ.சு. சமீரன் தலைமை வகித்துப் பேசியது: தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வருவாய், பொது சுகாதாரம், உள்ளாட்சி, காவல் துறைகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
பொதுஇடங்களில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதுடன், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்கவேண்டும். தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும், தண்ணீா்த் தொட்டிகளை சுத்தப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளில் அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சரவணன், இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) நெடுமாறன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) அருணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...