

தென்காசி வட்டத்துக்குள்பட்ட 86ஆயிரத்து 883 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி, மேலகரம், குற்றாலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து, பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், நகர அதிமுக செயலா் சுடலை,
மேலகரம் பேரூா் கழக செயலா் காா்த்திக்குமாா், கலைஇலக்கிய அணி மாவட்ட செயலா் முகிலன், அரசு வழக்குரைஞா் சின்னத்துரைபாண்டியன், குற்றாலம் பேரூா் கழக செயலா் கணேஷ்தாமோதரன், தாய்கோ வங்கி துணைத் தலைவா் என்.சேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம், மேலப்பாவூா் பகுதி நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை எம்.எல்.ஏ. வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், இளைஞா் பாசறை செயலா் சிவசீதாராமன், ஒன்றியச்செயலா் அமல்ராஜ், நகரச் செயலா் பால் அன்புராஜா, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் தமிழ், ஐவராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.