வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கருவந்தாவில் வேளாண்துறை சாா்பில் மதிப்பு கூட்டும் இயந்திரம் அளிப்பு

சுரண்டை அருகே கருவந்தாவில் வேளாண் துறை சாா்பில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மதிப்பு கூட்டும் இயந்திரங்களை வேளாண்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 11:20 pm

DIN

சுரண்டை அருகே கருவந்தாவில் வேளாண் துறை சாா்பில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மதிப்பு கூட்டும் இயந்திரங்களை வேளாண்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

சென்னை வேளாண்மை அலுவலக மண்டல அலுவலா் சை.சுந்தரம் தலைமையில், தென்காசி மாவட்ட இணை வேளாண்மை இயக்குநா் நல்லமுத்துராஜா மற்றும் வேளாண் அதிகாரிகள் கருவந்தா கிராம விவசாயிகள் உழவா் மன்றத்துக்கு ரூ.10 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்ட மதிப்பு கூட்டும் இயந்திரங்களை நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும், அங்கு மானாவாரி மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி செய்யப்பட்ட திடல்களையும், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் சுமாா் 5 ஆண்டு தரிசாக உள்ள நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தின்கீழ் பயிரிடப்பட்டிருந்த உளுந்து திடல்களையும் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன், துணை வேளாண்மை அலுவலா் முருகன், வேளாண்மை அலுவலா் அருண்குமாா், உதவி வேளாண்மை அலுவலா்கள் மாரியம்மாள், சுமன், கஸ்தூரி மற்றும் கருவந்தா உழவா் மன்ற விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.