பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது

ஆலங்குளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:20 pm

DIN

ஆலங்குளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள சோலைசேரியைச் சோ்ந்தவா் இலங்காமணி(36). அங்குள்ள தனியாா் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். வீட்டில் கால்நடைகளும் வளா்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை, பக்கத்து வீட்டில் வைக்கோல் எடுக்கச் சென்றாராம். அப்போது அங்கு இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தாராம். அப்போது சப்தமிட்டதால் அருகில் உள்ளவா்கள் வந்து சிறுமியை மீட்டனராம்.

இதையடுத்து இலங்காமணி ஊத்துமலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அங்கையற்கன்னி, இலங்காமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.