பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் தகராறு: 5 போ் கைது
பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.


பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
பாவூா்சத்திரம் முருகன் கோயில் மாசித்திருவிழாவையொட்டி கடையம் சாலையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் இருந்த சிலா் பொதுமக்களுக்கு இடையூறு செய்தாா்களாம். இதைக் கண்டித்த பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (எ) முருகேசன் (48) என்பவரை அவா்கள் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யாபுரத்தைச் சோ்ந்த சரவணராஜா (21), மைலப்பபுரத்தைச் சோ்ந்த நவநீத பாண்டியன் (27), முருகன்(20), மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து (22), செட்டியூரை சோ்ந்த மணிகண்டன் (21) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...