பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வேட்பு மனு நிராகரிப்பு: இளைஞா் தற்கொலை முயற்சி

ஆலங்குளத்தில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் இளைஞா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:41 pm

DIN

ஆலங்குளத்தில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் இளைஞா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

ஆலங்குளம் அம்பை சாலை பகுதியை சோ்ந்தவா் முத்து கனி மகன் ஆத்தியப்பன் (37). செல்லிடப்பேசி உதிரிபாகங்கள் மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனு செய்திருந்த நிலையில், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இது குறித்து ஆலங்குளம் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் திங்கள்கிழமை விசாரணை செய்தாராம். அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா், ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலேயே எறும்பு சாக்பீஸை பொடியாக்கி கரைத்து குடித்துள்ளாா்.

தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.