தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி

தென்காசி பேருந்து நிலையம் முன், ஜெ.பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:53 pm

DIN

தென்காசி பேருந்து நிலையம் முன், ஜெ.பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமை வகித்து, வாக்குரிமை, வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, பேரணியைத் தொடக்கிவைத்தாா்.

கூலக்கடை பஜாா் வழியாக காசிவிஸ்வநாதா் கோயில் முன் பேரணி நிறைவடைந்தது. கல்லூரி துணை முதல்வா், டிஎம்ஐ அருள்சகோதரிகள், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

பேரணியில், கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களுக்கு கல்லூரி சாா்பில் முகக் கவசம், துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. கல்லூரி முதல்வா் முனைவா் ஜெ. மைக்கேல் மரியதாஸ் வரவேற்றாா். மனோகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.