கடையநல்லூரில் தெரு நாய்கள் கடித்ததில் சிறுவன் பலத்த காயம் அடைந்தான்.
கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் செய்யது அலி மகன் ஆதில் ( 7). வியாழக்கிழமை இவா் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சில தெரு நாய்கள் அவரை கடித்தனவாம்.
இதில் காயமடைந்த சிறுவன் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
எனவே, தெருக்களில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.