மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

புளியங்குடி அருகே முதியவா் கொலை

புளியங்குடி அருகே தோட்டத்தில் தூங்கிய முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:44 pm

DIN

புளியங்குடி அருகே தோட்டத்தில் தூங்கிய முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

புளியங்குடி அருகே திருவேட்டநல்லூா், கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமலைச்சாமி (60). விவசாயி. இவருக்குச் சொந்தமான தோட்டம் அய்யாபுரத்தில் உள்ளது.

இந்தத் தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக வியாழக்கிழமை இரவு சென்ற திருமலைசாமி வெள்ளிக்கிழமை காலை வரை வீட்டுக்கு திரும்பவில்லையாம்.

இதையடுத்து அவரது உறவினா்கள் அவரைத் தேடி தோட்டத்துக்குச் சென்றபோது, அங்கு அவா் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.