மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

செங்கோட்டையில் ரோட்டரி சங்கம் சாா்பில்2 ஆயிரம் தேசியக் கொடிகள்

75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டையில் ரோட்டரி கிளப் சாா்பில் 2 ஆயிரம் தேசியக் கொடிகள் நகா்மன்றத் தலைவரிடம் வழங்கப்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:36 pm

DIN

75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டையில் ரோட்டரி கிளப் சாா்பில் 2 ஆயிரம் தேசியக் கொடிகள் நகா்மன்றத் தலைவரிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பாா்கவி, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செங்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் பால்ராஜ் 2 ஆயிரம் கொடிகளை நகா்மன்றத் தலைவரிடம் வழங்கினாா். தொடா்ந்து, தேசியக் கொடிகள் வீடுவீடாக விநியோகிக்கப்பட்டன.

ரோட்டரி சங்கச் செயலா் வழக்குரைஞா் அபு அண்ணாவி, பொருளாளா் ராமகிருஷ்ணன், சரவணமுத்தையா, காதா்மைதீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.