சாம்பவா்வடகரை பேரூராட்சியில் தேசத்தின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி இல்லம்தோறும் தேசியக் கொடியை ஏற்ற பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு தேசியக் கொடி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
சாம்பவா்வடகரை பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் சீதாலெட்சுமி முத்து பொதுமக்களுக்கு தேசியக் கொடியை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலா் காயத்ரி, மன்ற உறுப்பினா்கள் ரபீக் ராஜா, ஐயப்பன், சுடலைமுத்து, மொ்சி, ராமலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.